ஹைக்கூ கவிதை துளிகள்
Saturday, April 30, 2022
நாட்கள் நகராதோ
நேரம் தேயாதோ - விரைவில்
நாட்கள் நகராதோ - தொலைவில்
நீ இருந்தும்
எனை
தொல்லை
செய்கிறாய்
- திலீபன் -
Monday, June 24, 2019
கடைசி முத்தம்
அவள் தந்த கடைசி
முத்தமும் அதன் சத்தமும்
இன்னும் எந்தன் காதருகே..!!
- திலீபன் -
Friday, April 5, 2019
கண்களை பார்
கண்களை பார்
கவிதை வரும் என்பாள்..
பார்த்து விடாதே
சுவாசம் கூட நின்றுவிடும்..
அவள் பார்வையே
உன்னை கொன்று விடும்..
இதில் எங்கிருந்து
கம்பர்போல் கவிதை வரும்..
** திலீபன் **
Wednesday, December 5, 2018
மீண்டும் ஓர் பிறவி
மீண்டும் ஓர் பிறவி வேண்டும்
அதிலும் தீண்டும்
உன் விரல்கள் வேண்டும்
**திலீபன்**
Wednesday, November 14, 2018
காந்த விசை கண்கள்
காந்த விசை கண்கள்
ஒளி வீசும் பற்கள்
தேன் சொட்டும் உதடுகள்
சங்கென மிளிரும் கழுத்து
மெருகேற்றிய மெல்லிடை
மென்மையான சின்ன நடை
எனக்கு உன் மெய் அழகு - ஆனால்
கவிதைக்கு பொய் அழகு..!!
**திலீபன்**
கைவிரல் தீண்டையில்
என் கைவிரல் தீண்டையில்
உன் பூவிதழ் மேனி புண் படுமோ
என்கின்ற பயத்தில் தான் - உன்னை
தொடாமல் தள்ளிநின்று தாகம் தீர்க்கிறேன்
**திலீபன்**
Saturday, November 10, 2018
அடைமழை நேரத்தில்
அடைமழை நேரத்தில்
அணைத்திட ஆசையில்லை
குடை பிடித்து கூடவா
இடைபிடித்து நடக்க ஆசை
* திலீபன் *
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
நாட்கள் நகராதோ
நேரம் தேயாதோ - விரைவில் நாட்கள் நகராதோ - தொலைவில் நீ இருந்தும் எனை தொல்லை செய்கிறாய் - திலீபன் -
காந்த விசை கண்கள்
காந்த விசை கண்கள் ஒளி வீசும் பற்கள் தேன் சொட்டும் உதடுகள் சங்கென மிளிரும் கழுத்து மெருகேற்றிய மெல்லிடை மென்...
கண்களை பார்
கண்களை பார் கவிதை வரும் என்பாள்.. பார்த்து விடாதே சுவாசம் கூட நின்றுவிடும்.. அவள் பார்வையே உன்னை கொன்று விடும்.. இதில் எங...
அன்னைக்கு மட்டும் தான் தெரியும்
அடுத்தவரின் கண் படும் என்று கண் மையை எடுத்து கன்னத்தில் வைத்த அன்னைக்கு மட்டும் தான் தெரியும் ஆசை மகனின் அழகு *திலீபன்* ...